ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில், 2 மாணவர்களை மேஜையில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 5-ஆம் வகுப்பு மற்றும் 3-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரின் கை, கால்களை மேஜையில் கட்டி பள்ளி நிர்வாகம் தண்டித்துள்ளது. இது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, ஒரு மாணவன் காதல் கடிதம் எழுதியதாலும், மற்றொரு மாணவன் சக மாணவர்களின் பொருட்களை எடுத்துச்செல்வதாலும் இத்தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அந்த மாணவர்களை அவர்களின் பெற்றோர்களே அவ்வாறு கட்டி வைத்ததாகவும் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவர்களை மேஜையில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அச்யுத்தா ராவ் வலியுறுத்தினார்.